அக்டோபர் 5, 1823 - வள்ளலார் பிறந்த நாள்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற கூற்றின் சொந்தக்காரர் வள்ளலார் இதே தினத்தில் தான் பிறந்தார். 1823ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையாபிள்ளை - சின்னமைய்யார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் ராமலிங்க அடிகளார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார். சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலார் 1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பா வாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. வள்ளலாரின் திருவருட்பாவிற்கு எதிராகவும் அவரது கொள்கைகளுக்கு எதிராகவும் பல கண்டனங்கள் அந்த காலகட்டத்தில் எழுந்தன. இவர் சைவ சமயத்தை முழுவது மாற்றுவதாக எண்ணி இவரது திருவருட்பாவிற்கு எதிராக, பல கண்டன நூல்களும் வெளியாகின.

No comments:
Post a Comment