Monday, October 5, 2015




இன்று திருப்பூர் குமரன் பிறந்த தினம் 

(அக்டோபர் 4, 1904 ) 

இவர் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் காந்தியடிகளால் மீண்டும் தொடங்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் காங்கிரஸின் இந்திய தேசீயக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று , அணிவகுத்துச் சென்றார். கொடியினைக் கீழே போடுமாறு காவலர்கள் மிரட்டியும் அதற்குப் பணியாமல் கொடியினை மேலும் உயர்த்திப் பிடித்து வந்தே மாதரம் என்று கோஷத்தை முழங்கினார். காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் தேசியக் கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிர் துறந்தார் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment