இன்று இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன்பிறந்த நாள் - அக்டோபர் 27, 1920. குடியரசு தலைவர் பதவி வகித்த ஒரே தலித் சமூகத்தவர் கே.ஆர் நாராயணன்தான். குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வாக்குகள் அதாவது 9,56,290 வாக்குகளைப் பெற்று ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி. என். சேஷனை விட மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இவரும் வாக்களித்தார். இந்தியக் குடியரசின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது இவரே அவ்விழாக்களுக்கு தலைமை வகித்து சிறப்பித்தார்.

No comments:
Post a Comment