தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
தஞ்சை மாவட்டக் குழு.
கண்டனக் கூட்டம்.
கருத்துரிமை மற்றும் பண்பாட்டுரிமைக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து 07-11-2015 அன்று தஞ்சாவூரில் AITUC மாவட்டச் சங்கக் கட்டிடத்தில் கண்டனக் கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர். ஆ. குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு இலக்கிய அமைப்புக்களைச் சார்ந்த கீழ்க்கண்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
முனைவர். பெ. ராமலிங்கம், தலைவர், முள்ளி வாய்க்கால் முற்றம்.
தோழர். எஸ்.சிவசிதம்பரம், மாவட்டத் தலைவர், த.க.இ.பெ.மன்றம்.
தோழர். கே. இராசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
தோழர். வைகறை, தமிழ் இலக்கியப் பேரவை.
தோழர். சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கிய வட்டம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கருத்துரிமை மற்றும் பண்பாட்டுரிமைக்கு எதிரான வன்மங்களைக் கண்டிப்பது.
2. மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்று வரும் ஊழல் மற்றும்
மதவாத சக்திகளுக்கு மாற்றாக மக்கள் நல, மதச்சார்பற்ற,
முற்போக்கு அரசியல் சக்திகளுக்கு ஆதரவளிப்பது.
3. மக்கள் இசைப் பாடகர் கோவனை விடுதலை செய்ய
வலியுறுத்துவது.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர். அய்யாறு. புகழேந்தி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.